
ஒரே பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த அதிபர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, முதன்மை இடமாற்றக் கொள்கையை அங்கீகரித்துள்ளதுடன், அந்தக் கொள்கைக்கு வெளியே இடமாற்றங்கள் செயல்படுத்தப்படாது அல்லது இடைநிறுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்த அதிகாரிகள் இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரே தங்கள் மேல் முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் தவிர்ந்த வேறு எந்த காரணத்திற்காகவும் இடமாற்றங்கள் நிறுத்தப்படாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.