வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்!

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் சென். பீட்டர்ஸ் பெசிலிக்காவிலுள்ள இல்லத்தில் நேற்று (21) காலமானார். இந்த செய்தியை வத்திக்கான் திருச்சபை காணொளி அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

புனித பாப்பரசர் பிரான்சிஸ் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் இறை சேவையாற்றி வந்திருந்தார்.

இதேவேளை புனித பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என, வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply