கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மாத்தறை சிறைச்சாலை மோதல்- அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இடமாற்றம்!

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போதே இந்த அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டு கைதிகளை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டனர்.

சிறைச்சாலையின் மேல் பாதுகாப்பு அறைகளில் இருந்த சிறை அதிகாரிகளை கைதிகள் கற்களாலும், வேர்களாலும் தாக்கியுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.

எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பை வழங்க பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டிருந்தது.

மோதல் நிலை தொடர்ந்ததால் நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சிறையில் இருந்த 25 பெண் கைதிகளை அவர்களின் பாதுகாப்புக்காக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு, சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாத்தறை சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையால் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்தார்.

எனினும் எந்தக் கைதிகளும் காயமடையவோ அல்லது உயிராபத்து ஏற்படவோ இல்லை என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை இன்று (23) காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையின் சேமிப்பு அறை மற்றும் பல பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply