
தபால் வாக்காளர்கள் தமது வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காணுவதற்கு உதவும் வகையில் ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் ‘ஈ’ சேவையை, eservices.elections.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து, அதில் அரச அதிகாரிகளுக்கான தபால் வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பை அணுகி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.