தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (24), நாளை (25) மற்றும் 28, 29 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் மேற்குறித்த நான்கு நாட்களிலும் தமது தபால்மூல வாக்குகளை பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தபால்மூல வாக்களிப்பதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply