
புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் , கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.