பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் இன்று (25) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply