
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் இன்று (25) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.