
பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையத்தின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்றும், அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்றும் அவர் மேலும் கூறினார்.
எனினும் இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரீட்சைகள் நடாத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தில் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.