மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

கெகுளுவெல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருடன் பணிபுரிந்த மற்றுமொரு நபரும் மின்னல் தாக்கத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply