
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
இதனால் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.