உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது.

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகள் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் மே 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதன்படி 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இது உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply