
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (29) உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு மீதான விசாரணை ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இன்று உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.