அரச பேருந்து, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து- 30 பேர் காயம்!

அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து பெலியத்த பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹெட்டியாராச்சி வளைவில் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply