விபத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்- மருத்துவமனையில் அனுமதி!

ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் உள்ள அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 76 மற்றும் 80 வயதான பெண்களே காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பக்கவாட்டு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply