யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்,

தமது சம்பள உயர்த்தப்பட வேண்டும்,

தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில், அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை. உடனடியாக அந்நிறுவனம் எம்மை பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் போராட்டம் காரணமாக, நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் நோயாளிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply