இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளராக பணியாற்றி வந்த ஒருவரை, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

காலி, உனவட்டுன பிரதேசத்தில் இயங்கிவரும் முறைப்பாட்டாளருக்கு சொந்தமான உணவகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக 25,000 ரூபாவை குறித்த அதிகாரி இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து முறைப்பாட்டாளர் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று (30) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply