
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1993 மே 01ஆம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஜனாதிபதி பிரேமதாசவும், 22 பேரும் கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று (01) நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
கொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.