
கல்கிஸை பகுதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பில் அவரது சகோதரர்களில் ஒருவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.