தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளைய தினம் (03) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதால், வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளைய தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply