
சிலாபம், தெதுரு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நேற்று (01) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் கண்டியிலிருந்து சிலாபம் பகுதிக்கு நண்பர்கள் குழுவுடன் ஒரு பொழுதுபோக்குப் பயணமாகச் சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காணாமல் போன இரு இளைஞர்களையும் கண்டுபிடிக்க சிலாபம் காவல்துறையினர், இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.