டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி கைது!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டேன் பிரியசாத், கொழும்பு- வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மேல் தளத்தில் வைத்து கடந்த ஏப்ரல்  செவ்வாய்க்கிழமை (22) இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

டேன் பிரியசாத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply