
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று துப்பாக்கிதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (3) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.