அம்பாறை பகுதியில் வெடிமருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு பல வெடிபொருட்கள் திருட்டு!

அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெடி மருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெடிமருந்து உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த களஞ்சியசாலையில் இருந்து 45 கிலோ கிராம் ஜெல் குச்சிகள், 10 மீட்டர் சேர்வீஸ் நூல், 4100 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் தனியார் கல்குவாரி உரிமையாளர்களின் வெடிமருந்து களஞ்சியாலை அமையப்பெற்றிருந்ததுடன், வெடிமருந்து களஞ்சியாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் காவல் அரண் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு அமையப்பெற்றிருந்த மூன்று வெடிமருந்து களஞ்சியாலைகளில் ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், மற்றொன்று அப்படியே இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply