
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்றும், அந்த பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமை போல செயல்படும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி,
கொழும்பு ரோயல் கல்லூரி
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி
புத்தளம் சாஹீரா கல்லூரி
பதுளை மத்திய மஹா வித்தியாலயம் முதலான சில பாடசாலைகள் மே 7ஆம் திகதி மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.