20ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டம்- பிரதம விருந்தினராக பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி!

வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.

“மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை, உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.

நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இலங்கை நேரப்படி இன்று (06) காலை 7.40 மணியளவில் பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.

இந்த உரை இன்று உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் இலங்கை, இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் உட்பட சுமார் 2,800 பேர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply