
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இன்று (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலக வங்கி தலைவர் ஒருவரின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.
அஜய் பங்காவின் வருகையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தனியார் துறைத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.