
நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 வாக்குகள் – 48 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 வாக்குகள் – 29 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 26,297 வாக்குகள் – 13 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 வாக்குகள் – 5 உறுப்பினர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – (SLMC) – 8,630 வாக்குகள் – 4 உறுப்பினர்.
இந்த நிலையில் கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது.
ஆளுங் கட்சியான தேசிய மக்கள் சக்தியைவிட, எதிர்க்கட்சிகளுக்கு அதிகமான ஆசனங்கள் உள்ளன.
17 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.
எனவே, தற்போது பெரிதும் பேசும் பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகும் கூட்டணி எதுவென்பதை காலமே தீர்மானிக்கும்.