
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடமை புரிந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் திடீர் மரணங்களுக்கான பதில் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிகமாக மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் திடீர் மரணங்களுக்கான பதில் மரண விசாரணை மேற்கொள்ள நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சின் செயலாளரால் இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.