அம்ஷிகாவுக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி இன்றையதினம் (09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் மாணவர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு மாலை 4 மணி வரை அமைதியான முறையில் போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply