
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வலி. வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்படாமல் உள்ள மக்கள் காணிகளில் இராணுவத்தினர் பெரும் விமரிசையாக வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்தினர் வசமுள்ள மக்கள் காணிகளை விடுவிக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், பல்வேறு காரணங்களைக் காட்டி இராணுவம் காணிகளை விடுவிக்காது இழுத்தடித்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த காணிகளில் இராணுவத்தினர் தற்போது வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி பலாலி வடக் கில் J/254 கிராம அலுவலர் பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளிலும், பலாலி வடமேற்கில் J/255 கிராம அலுவலர் பிரிவில் உள்ள காணிகளிலும் வெசாக் கூடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வெசாக் கொண்டாட்டங்கள் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணிகளுக்கு அருகில் வலி. வடக்கு பிரதேசசபைக்குச் சொந்தமான பொதுச் சந்தை ஒன்றும் உள்ளது. அதையும் இராணுவத்தினர் தற்போது வரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
போரில் கொல்லப்பட்ட தங்களின் உறவு களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நேரத்தில், இராணு வத்தினரால் வெசாக் கொண்டாட்டங்கள் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தைத் குழப்பி, திசைதிருப்பும் வகையிலேயே பௌத்த மக்கள் வாழாத, இன்னமும் படைக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் மக்களின் நிலங்களில் இவ்வாறு இராணுவத்தால் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்