ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது
அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இதனால் இந்திய அணியின் அணி தலைவராக இருந்த ரோகித் சர்மா மீதும், மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply