யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- 20 பேர் வைத்தியசாலையில்!

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகியமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply