உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் தந்தை ஒருவர் தனது குழந்தையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

ஆறு வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளிவந்துள்ளது. குடும்பத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதனையின் போது உணவில் கிருமிநாசினி கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளை அடுத்து குழந்தைக்கு உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply