
மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால், பாலியல் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த சந்தேகநபர் தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
ஆங்கிலத்தில் நன்கு படித்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட சிறுமியுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் மற்றும் சிறுமியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.