
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இன்றையதினம் (13) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைத்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.