
மகியங்கனை பகுதியில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.