
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் இளைஞர்கள் நால்வரும் ஒன்றாக இனைந்து நீராடி கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அடித்து செல்லப்பட்ட இளைஞர்களின் சடலம் வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்களாகவும், மற்றும் ஒருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதன்படி 17 வயத்தைச் சேர்ந்த உதயகுமார் ஸ்ரீதரன், 19 வயத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சரன்ராஜ், 18 வயத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அஜித்குமார், 27 வயத்தைச் சேர்ந்த யூசுப் ஆகியவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் எனவும் பொலிஸார் விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.