
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்த மனுவை உறுதி செய்வதற்கு ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்றையதினம் (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் உள்ள சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக, அதனை எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.