லிட்ரோ எரிவாயு மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல வருடங்கள் ஆகியும் தமது சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட வழங்கவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்குவதாக எழுத்துப்பூர்வ வாக்குறுதியை அளிக்கும் வரை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply