மாணவி அம்ஷிகா தற்கொலை விவகாரம்- தாயாரிடம் சாட்சிப் பதிவு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில், மரண விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது சிறுமி தற்கொலை செய்துகொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் முதலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதுடன்,
பின்னர் இறந்த சிறுமியின் தாயாரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply