பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் விபத்து- இருவர் வைத்தியசாலையில்!

பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவேளையில், ஹட்டன் – ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில் ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து ஆணைக் கொய்யா பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply