
திருகோணமலை பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள அரச வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய
எட்வேட் கோமர்ஸ் என்பவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அவரது குடும்பத்தினரை அழைத்து காட்டிய போது, குறித்த நபர் அணிந்திருந்த சேட் மற்றும் சாரம் ஆகியவற்றை வைத்து இது தனது தந்தை என மகள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.