
தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஹிருசன் என்பவர் அந்த கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் (15) கோப்பாய் பகுதி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும், எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடனும் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.