உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் இன்றையதினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply