
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (17) நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பை ஏற்று தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்திற்கு பின்னர்,நேற்று (16) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.