
புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்கின்ற போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத் தகடுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ, ஸ்டிக்கர்களோ வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்கின்ற போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.