
தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதி எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த இரத்ததான முகாமில் மக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.