காங்கேசன்துறை துறைமுகத்தில் குஷ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்தியர்!

காங்கேசன்துறை துறைமுகத்தில் 04 கிலோகிராம் 120 கிராம் குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா, நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வருகைத்தந்தவர்களை, துறைமுக வளாகத்தில் வைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply