
தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதி எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.
அதன்படி இன்றையதினம் (17) நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.