விசாரணைக் குழுவில் ஆஜராகவுள்ள தேசபந்து தென்னகோன்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் செய்தமை குறித்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதன்படி குறித்த விசாரணை குழு மே 19ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு தேசபந்து தென்னகோனை ஆஜராகுமாறு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய தேசபந்து தென்னகோன் இன்றைய தினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply